கள்ளக்குறிச்சி:
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே தனியார் பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
விழுப்புரத்திலிருந்து சென்னை நோக்கி வந்த பேருந்தும், காங்கேயம் நோக்கி சென்ற காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்டது.
இந்த விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேற்படி விபத்து நடந்த இடத்தில் மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும், காயம் அடைந்தவர்களை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.