தர்மபுரி:
பலமுறை மனுகொடுத்தும் சரிசெய்யாத ஓகேனக்கல் சாலையை மக்களே சீர்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
தமிழகத்தின் புகழ் பெற்ற சுற்றுலா தளம் ஒகேனக்கல். நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சுற்றுலா தளத்திற்கு வந்து செல்கின்றனர்.
ஆனால் ஒகேனக்கல் முதல் நாட்ராம்பாளையம் வரை, உள்ள சாலை வாகனங்கள் வந்து செல்ல முடியாத அளவிற்கு சேதம் ஏற்பட்டுள்ளது.
இதனை சீர்படுத்த கோரி பலமுறை மக்கள் போராடியும், மனு கொடுத்தும் அரசு எவ்வித நடவடிக்கை எடுக்காததால் மக்கள் அதிகாரம் அமைப்பு சார்பாக மக்களை திரட்டி பழுதான சாலையை சீர்ப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
மக்களுக்கு தேவையான சாலையை போட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் இந்த சாலையில் அடிக்கடி சாலை விபத்துகள் ஏற்பட்டு வருவதாக மக்கள் அதிகாரம் குற்றம் சாட்டியது.