நீதிமன்றத்தில் மயங்கி விழுந்த நிர்மலா தேவி

நீதிமன்றத்தில் மயங்கி விழுந்த நிர்மலா தேவி

ஸ்ரீவில்லிபுத்தூர்:

மாணவிகளை தவறாக வழி நடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜரான பேராசிரியர் நிர்மலா தேவி மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த வழக்க இன்று காலை விசாரணைக்கு வந்தது. அப்போது, பேராசிரியை நிர்மலா தேவி, கருப்பசாமி, முருகன் ஆகிய மூவரும் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள்.

இந்நிலையில், வழக்கு விசாரணை தொடங்கியதும் நீதிமன்றத்திற்குள் பேராசிரியை நிர்மலா தேவி திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அங்கிருந்த பெண்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதனைத்தொடர்ந்து இவ்வழக்கு விசாரணை இம்மாதம் 23ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி பரிமளா உத்தரவிட்டார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்