தொழில்நுட்ப கோளாறு.. சந்திராயன் 2 அடுத்த வாரம் ஏவப்படும்.!

தொழில்நுட்ப கோளாறு.. சந்திராயன் 2 அடுத்த வாரம் ஏவப்படும்.!

ஸ்ரீஹரிகோட்டா:

நிலவின் தென் துருவ பகுதியில் ஆராய்ச்சி செய்வதற்காக ‘இஸ்ரோ’ மேற்கொண்டுள்ள கனவு திட்டம், ‘சந்திரயான்-2’ ஆகும்.

இந்த ‘சந்திரயான்-2’ விண்கலத்தை ‘ஜி.எஸ்.எல்.வி. மார்க்- 3’ ராக்கெட் மூலம் கடந்த 15ம் தேதி அதிகாலை 2.51 மணிக்கு சென்னையை அடுத்த ஸ்ரீஹரிகோட்டாவில் சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் 2வது ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்துவதற்கு எல்லா ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருந்தன.

இந்நிலையில் திடீரென அதிகாலை 1.50 மணிக்கு தொழில்நுட்ப காரணங்களால் ‘சந்திரயான்- 2’ விண்கலத்தை விண்ணில் செலுத்துவது நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது ராக்கெட்டில் ஏற்பட்டிருந்த தொழில்நுட்ப கோளாறை விஞ்ஞானிகளும், என்ஜினீயர்களும் இணைந்து பணியாற்றி சரி செய்து விட்டதாக ‘இஸ்ரோ’ வட்டாரங்கள் தெரிவித்தன.

இதையடுத்து ‘சந்திரயான்  2’ விண்கலத்தை 20ம் தேதி முதல் 23ம் தேதிக்குள் ஒரு நாளில் விண்ணில் செலுத்தப்படும் என்று உத்தேசமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்