மணப்பெண்ணுக்கு கொரோனா, தாலிக்கட்டியதும் தனிமைப்படுத்தப்பட்டார்

மணப்பெண்ணுக்கு கொரோனா, தாலிக்கட்டியதும் தனிமைப்படுத்தப்பட்டார்

சேலம் மாவட்டம் கெங்கவல்லி 74 கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த 26 வயது பெண் சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். அதே ஊரைச் சேர்ந்த 27 வயது உறவினர் கோவையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார்.இருவருக்கும் நேற்று திருமணம் நடத்த நிச்சயிக்கப்பட்டிருந்தது. கடந்த 21ல் ‘இ – பாஸ்’ மூலம் சென்னையிலிருந்து பெண் வந்தார். தலைவாசல் நத்தக்கரை சோதனைச்சாவடியில் அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா இருப்பது நேற்று முன்தினம் உறுதியானது. இதனால் வீட்டிலிருந்து வெளியே வரவேண்டாம் என பெண்ணை அறிவுறுத்தினர்.ஆனாலும் திட்டமிட்டபடி நேற்று காலை முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் எளிமையான முறையில் அவருக்கு திருமணம் நடந்ததுசில மணி நேரத்தில் மணப்பெண் மாப்பிள்ளையை சுகாதார அதிகாரிகள் அவரவர் வீட்டில் தனிமைப்படுத்தினர். திருமணத்தில் பங்கேற்றவர்களையும் தனிமைப்படுத்தி அவரவர் வீடுகளில் ‘நோட்டீஸ்’ ஒட்டினர். திருமணம் நடந்த வீடு தெரு கிராம பகுதியில் நோய் தடுப்பு பணியில் ஈடுபட்டனர்.சுகாதாரத் துறையினர் கூறுகையில் ‘புதுமண தம்பதி திருமணத்தில் பங்கேற்ற குடும்பத்தினர் உறவினர் உட்பட 12 பேர் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்’ என்றனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்