பாங்காக்:
தாய்லாந்தில் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோடிரிசனை பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடைபெறும் ஆர்சிஇபி உச்சிமாநாட்டிற்கு முன்னதாக ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசனை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தார்.
இரு தலைவர்களும் இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான உறவை வலுவாக்குவது குறித்து ஆலோசனையில் ஈடுபட்டனர்.
அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் ஆஸ்திரேலிய பிரதமர் இந்தியா வருகைதருவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.