கோவை மாவட்ட கலெக்டருக்கு கொரோனா தொற்று உறுதி

கோவை மாவட்ட கலெக்டருக்கு கொரோனா தொற்று உறுதி

கோவை மாவட்ட கலெக்டர் ராஜாமணிக்கு கொரோனா தொற்று, இன்று(ஜூலை15) உறுதி செய்யப்பட்டு உள்ளது. அவர், தற்போது கோவை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை இல்லாத அளவிற்கு நேற்று (14ம் தேதி) ஒரே நாளில், 188 பேருக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டது. கோவையில் நேற்று வரையில், 1,480 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில், இன்று கோவை மாவட்ட கலெக்டர் ராஜாமணிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் தற்போது கோவை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.மாவட்ட கலெக்டருக்கே கொரோனா ஏற்பட்டுள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்