பிரதமர் மோடியின் கதையை முடிக்க, மனித வெடிகுண்டாகவும் செயல்படத் தயார் என்று சேலத்தை சேர்ந்த பெண், தனது முகநூலில் பகிரங்கமாக மிரட்டியுள்ளா.ர் இவ்விஷயத்தில் காவல்துறை நடவடிக்கை எடுக்காமல் அமைதியாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சேலத்தை சேர்ந்தவர், பரிமளா; சமூக ஆர்வலர் என்ற அடைமொழியோடு அவ்வப்போது அரசுக்கு எதிரான கருத்துகளை அள்ளி வீசி வருபவர்; கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் நாட்டிற்கு எதிராகவும் பேசி வருபவர்.
இந்நிலையில், பிரதமர் மோடிக்கு எதிராக இவர் விடுத்துள்ள மிரட்டல் தான், தற்போது கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகியுள்ளது. அதாவது, மோடி ஆட்சியில் நாடு 50 ஆண்டுகள் பின்னோக்கி சென்றுவிட்டதாக தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள அவர், எந்த வகையிலும் மோடியால் நாட்டுக்கு நன்மையில்லை என்று கூறியிருக்கிறார்.
பிரதமர் மோடியின் கதையை முடிக்க வேண்டும்; இதற்காக மனித வெடிகுண்டாக செயல்படவும் தயார் என்று, பரிமளா தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பிரதமர் மோடியின் உயிருக்கு தீவிரவாதிகள் சதி என்ற உளவுத்துறை தகவலை குறிப்பிட்டு, தீவிரவாதிகளுக்கு நன்றி எனவும் அவர் பதிவிட்டுள்ளார்.
பிரதமர், உள்துறை அமைச்சரை அவதூறாக பேசிய சர்ச்சையில் பேச்சாளர் நெல்லைக் கண்ணன் விவகாரத்திலேயே காவல்துறையினர் தாமதமாக செயல்பட்டதாக குற்றச்சாட்ட்டு உள்ளது. பிரதமரை கொல்ல மனித வெடிகுண்டாகவும் தயார் என்று மிரட்டல் விடுக்கும் இதுபோன்றவர்கள் விஷயத்திலும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காமல் வழக்கம் போல் அலட்சியமாக இருந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.