பிரமாண்ட உலக சாதனை

  • In Chennai
  • January 13, 2020
  • 329 Views
பிரமாண்ட உலக சாதனை

சென்னை:

விவசாயிகளை கவுரவிக்கும் விதமான ‘ஏர் உழவன்’ போன்ற மாணவர்களின் சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது.

சென்னை பெரம்பூரில் உள்ள தனியார் பள்ளியில், உலக சாதனை முயற்சியாக விவசாயிகளை கவுரவிக்கும் விதமாக ஏர் உழவன் போன்ற வடிவில் மாணவ, மாணவிகள், பொதுமக்கள் உள்ளிட்டோரின் சாதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

இதில் 3,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வை உலக சாதனை புத்தகத்தில் பதிவிடுவதற்காக சம்பந்தப்பட்ட அமைப்பினர் வந்திருந்தனர். அவர்கள் நிகழ்ச்சியை ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.

இதையடுத்து சிறந்த விவசாயிகளுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இந்த உலக சாதனை முயற்சியின் தொடக்கமாக பறை இசை, பரதம் உள்ளிட்ட பாரம்பரிய நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகள் ஆகியவை நடத்தப்பட்டன. இதனை ஏராளமான மக்கள் நேரில் கண்டு ரசித்தனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்