சென்னை:
இலங்கையில் தேசிய கீதம் சிங்கள மொழியில் மட்டும் இசைக்கப்படும் என்ற அறிவிப்புக்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பதிவில், இலங்கையின் சுதந்திர தினத்தன்று சிங்களத்தில் மட்டும் தேசிய கீதத்தை இசைப்பது என்ற முடிவு கவலையையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இம்மாதிரியான பெரும்பான்மைவாதம் இலங்கையில் உள்ள தமிழர்களை மேலும் அன்னியப்படுத்தும். பிரதமரும் வெளியுறவுத் துறை அமைச்சரும் இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட வேண்டும் என தனது ட்விட்டர் பதிவில் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.