சென்னை:
சென்னையிலிருந்து வெளியூர் செல்லும் விமானக் கட்டணம் அதிரடியாக உயர்ந்துள்ளது.
கிறிஸ்துமஸ், ஆங்கில வருடப்பிறப்பு மற்றும் பொங்கல் பண்டிகைக நெருங்குவதாலும், தமிழகத்தின் வெளியூர் செல்லும் உள்ளூர் விமானங்களின் டிக்கெட் கட்டணங்கள் அதிகரித்துள்ளது.
கிறிஸ்துமஸ் தினத்தன்று, சென்னை விமானநிலையத்திலிருந்து திருவனந்தபுரம், மதுரை,, பெங்களூ செல்வதற்காக டிக்கெட் கட்டணம்ம ரூ.10,000த்தை நெருங்கியுள்ளது. அதேபோல், தூத்துக்குடிக்கு ரூ.16,000 எனவும் கட்டணம் நிர்ணயிக்கப்பப்டுள்ளது.
வரும் 30ம் தேதி சென்னையிலிருந்து மதுரைக்கு ரூ.3000 முதல் ரரூ.6000 வரையிலும்ம, தூத்துக்குடி, கொச்சி, திருவனந்தபுரத்திற்கு ரூ.4000 முதல் ரூ.8000 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
வரும் 29ம் தேதி சென்னையிலிருந்து மதுரைக்கு ரூ.4000 கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில், இன்று ஸ்பைஸ் ஜெட்டில் 12,105 ரூபாயும், இண்டிகோவில் 16,500 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்பட்டது