திட்டமிட்டபடி 19ல் ஐபிஎல் ஏலம்

  • In Sports
  • December 17, 2019
  • 254 Views
திட்டமிட்டபடி 19ல் ஐபிஎல் ஏலம்

மும்பை:

இந்தியாவில் ஐபிஎல் ஏலம் வரும் 19ம் தேதி திட்டமிட்டபடி நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.

நாடுமுழுவதும் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. அதன் காரணமாக 19ம் தேதி நடக்க இருந்த ஐபிஎல் ஏலம் ஒத்திவைக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது.

இந்நிலையில் திட்டமிட்ட அதே தேதியிலே ஏலத்தை நடத்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனைத்தொடர்ந்து, டெல்லி கேபிடல்ஸ் அணி நிர்வாகத்தினர் இன்று கொல்கத்தா செல்லும் நிலையில், மற்ற அணி நிர்வாகிகள் அடுத்தடுத்த தினங்களில் செல்வார்கள் என கூறப்படுகிறது. 29 வெளிநாட்டு வீரர்கள் உள்ளிட்ட 73 வீரர்கள் இடங்களுக்கு ஏலம் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்