விஜயவாடா:
விஜயவாடாவில் கிரிக்கெட் மைதானத்தில் பாம்பு நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆந்திர மற்றும் விதர்பா அணிகளுக்கு இடையேயான ரஞ்சி போட்டி விஜயவாடாவில் இன்று துவங்கியது. போட்டி துவங்கும்போதே மைதானத்தில் பாம்பு ஒன்று புகுந்தது. அப்போது பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து பாம்பு அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்ட பின், ரஞ்சி போட்டி துவங்கியது.