பன்ருட்டி:
பன்ருட்டி அருகே ஊராட்சி தலைவர் பதவிக்கு ரூ.50 லட்சமும், துணைத்தலைவர் பதவிக்கு ரூ.15 லட்சத்திற்கும் ஏலம் போனது.
தமிழகத்தில் வரும் 27 மற்றும் 30ம் தேதிகளில் ஊரகங்களுக்கான உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டமாக நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று முதல் தொடங்கியுள்ளது.
இந்நிலையில், கடலூர் மாவட்டம், பன்ருட்டி அருகே உள்ள நடுக்குப்பம் ஊராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவி ஏலத்தில் விடப்பட்டுள்ளது. ஊர் பொதுமக்கள் ஒன்று கூடி இந்த ஏலத்தை நடத்தியுள்ளனர்.
இதில் தலைவர் பதவிக்கு, ரூ.50 லட்சமும், துணைத்தலைவர் பதவிக்கு ரூ.15 லட்சமும் ஏலத்தொகை நிர்ணயிக்கப்பட்டது. அதிமுக பிரமுகரான சக்திவேல் என்பவர் தலைவர் பதவியை ஏலம் எடுத்துள்ளார்.