சென்னை:
தமிழகத்தின் உள்ளாட்சி தேர்தல் குறித்து அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகளுடன் மாநில தேர்தல் ஆணையர் நாளை ஆலோசனையில் ஈடுபடுகிறார்.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் முன்ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருகிறது. தமிழகம் முழுவதும் வாக்குச்சாவடிகள், மின்னணு இயந்திரங்கள் உள்ளிட்டவைகள் தயார் நிலையில் உள்ளனர்.
இதனைத்தொடர்ந்து, மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் பணியாளர்களை நியமிக்கப்படவுள்ளனர். மேலம் அரசியல் கட்சிகளின் மாநில தேர்தல் ஆணையர் பழனிச்சாமி நாளை ஆலோசனை நடத்தவுள்ளார். நாளை காலை 11 மணியளவில் கோயம்பேட்டில் உள்ள அலுவலகத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளாட்சி தேர்தல் தேதி டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் அறிவிக்க வாய்ப்புள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.