இந்திய அணிக்கு 154 ரன்கள் இலக்கு

  • In Sports
  • November 7, 2019
  • 198 Views
இந்திய அணிக்கு 154 ரன்கள் இலக்கு

ராஜ்கோட்:

இந்தியா வந்துள்ள வங்கதேச அணி தற்போது டி20ஐ போட்டியில் விளையாடி வருகிறது. முதல் நாள் போட்டியில் இந்தியாவை வென்ற வங்கதேச அணி தற்போது 2வது போட்டியில் விளையாடி வருகிறது.

ராஜ்கோட்டில் நடக்கும் இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி, பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து, வங்கதேச அணி பேட்டிங்கில் களமிறங்கியது.

வங்கதேச அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 153 ரன்களை குவித்தது. இதனைத்தொடர்ந்து 154 ரன்கள் இலக்காகக்கொண்டு இந்திய அணி விளையாடி வருகிறது.

தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஷிகர் தவான் 11 ரன்களும், ரோஹித் சர்மா 7 ரன்களையும் அடித்துள்ளனர். தற்போது வரை 3 ஓவர்களில் 22 ரன்களை இந்திய அணி சேர்த்துள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்