சென்னை:
தமிழகம் மற்றும் புதுவையில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தெற்கு கர்நாடக கடலோர பகுதியையொட்டி, கிழக்கு மத்திய வங்கக்கடலில் வளி மண்டல சுழற்சி நிலவிவருகிறது.
இதன் காரணமாக தென்னிந்தியாவில் அடுத்த 3 நாட்களுக்கு ஒருசில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.