சென்னை:
சென்னையில் கார் ஷோரும் நிறுவன இணைத் தலைவர் ரீட்டா ஜானகி லங்காலிங்கம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
லான்சன் டொயோட்டா ஷோரும் இணை தலைவராக இருந்து வந்தவர் ரீட்டா ஜானகி லங்காலிங்கம்.
இவர் நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் இன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை உயர் அதிகாரிகள், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த தற்கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.