டெல்லி:
மத்திய அரசு சார்பில் வழங்கப்படும் பத்ம விருதுகளுக்கு விளையாட்டு துறைகளில் சாதித்த வீராங்கனைகளை தேர்வு செய்துள்ளது.
இந்த பட்டியலில் பி.வி.சிந்து, மேரி கோம், மணிகா பத்ரா, ஹர்மன்பிரீத் கவுர் போன்ற வீராங்கனைகளின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.
நம் நாட்டின் உயரிய விருதாக கருதப்படும் பத்ம விருதுகளை ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு வழங்கபடுவது வழக்கம்.
பத்ம விருதுகளுக்கு விளையாட்டுத் துறையில் இருந்து வீரர், வீராங்கனைகளின் பெயர்களை மத்திய விளையாட்டு அமைச்சகம் தேர்வு செய்துள்ளது.
இதில், பத்ம விபூஷண் விருதுக்கு குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் மற்றும் பத்ம பூஷண் விருதுக்கு உலக பாட்மின்டன் சாம்பியன் ஷிப்பில் தங்கம் வென்ற பி.வி.சிந்து தேர்வாகியுள்ளனர்.
அதை போலவே பத்மஸ்ரீ விருதுக்கு குத்துச்சண்டை வீராங்கனை வினேஷ் போகத், டேபிள் டென்னிஸ் வீராங்கனை மணிகா பத்ரா, கிரிக்கெட் வீராங்கனை ஹர்மன்பிரீத் கவுர் ஆகியோர்கள் தேர்வாகியுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.