சென்னை:
ப.சிதம்பரம் மீதான வழக்கில் அரசியல் காழ்ப்புணர்ச்சி உள்ளது என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன் ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ள நிலையில், ராகுல் காந்தி மற்றும் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் விமர்சனம் செய்து வருகின்றனர்.
இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், ப.சிதம்பரம் மீதான ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் அரசியல் காழ்ப்புணர்ச்சி உள்ளது. ப.சிதம்பரம் ஒரு சட்ட வல்லுனர், வழக்கை சட்ட ரீதியாகவே அவர் சந்திப்பார் என தெரிவித்துள்ளார்.