வாய்ப்பு இல்லை.. டிவி நடிகை தற்கொலை

  • In Cinema
  • August 10, 2019
  • 190 Views
வாய்ப்பு இல்லை.. டிவி நடிகை தற்கொலை

மும்பை:
பிரபல இந்தி சின்னத்திரை நடிகை ஒருவர் தன்னுடைய மகளை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்தி சீரியல் நடிகை பிரக்ன்ய பிரசாந்த் பார்கர் 40, இவருடைய மகள் ஸ்ருதி, கணவர் பார்கருடன் புனேவில் வசித்து வந்தார்.

பார்க்கர் ஜிம்முக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது தூக்கில் தொங்கிய நிலையில் பிரக்ன்யாவும் அவரது மகள் ஸ்ருதியும் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

இதனையடுத்து தனது மனைவி மற்றும் மகளையும் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.
இருவரையும் டாக்டர்கள் பரிசோதித்த பின்னர் ஏற்கெனவே இறந்து விட்டனர் என்று தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், தற்கொலைக்கு முன்னர் பிரக்ன்யா கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார்.

அதில் கடந்த சில ஆண்டுகளாக நடிப்பதற்கு வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் விரக்தியில் அவரது மகளை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொள்வதாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்