புதுடெல்லி:
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப்பிரிவு 370ஐ நீக்கியதற்கான அரசாணையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தான சட்டப்பிரிவு 370 மற்றும் 35ஏ நீக்கம் மற்றும் காஷ்மீரை இரண்டாக பிரிப்பது உள்ளிட்ட மறுசீரமைப்பு மசோதா நேற்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், சட்டப்பிரிவு 370ஐ நீக்கியதற்கான அரசாணையை மத்திய சட்டத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.