பர்மிங்கம்:
ஐசிசி கிரிக்கெட் போட்டியில் வங்கதேசத்துக்கு எதிராக, இந்திய அணி 314 ரன்களை குவித்துள்ளது.
இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் 40வது லீக் ஆட்டம் பர்மிங்கமில் நடைபெற்றுவருகிறது. முதலில் டாஸ் வென்ற இந்திய அணி வங்கதேச அணிக்கு எதிராக இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடிது.
இந்தப்போட்டியில் வங்கதேசத்துக்கு எதிராக 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 314 ரன்களை இந்திய அணி குவித்தது. வங்கதேச அணி 315 ரன்கள் இலக்காகக்கொண்டு பேட்டிங்கில் இறங்கவுள்ளது.
தொடக்க ஆட்டக்காரரான ரோஹித் ஷர்மா, உலகக்கோப்பை தொடரில் தனது 4வது சதத்தை எடுத்து சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.