5, 8ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து

5, 8ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து

சென்னை:

தமிழகத்தில் 5 மற்றும் 8ம் வகுப்புக்களுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் மாநில பாட திட்டத்தில் பயிலும் 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது. இதற்கான அட்டவணை மற்றும் முன்னேற்பாடுகள் நடைபெற்றுவந்தது. மார்ச் மாதத்தில் பொது தேர்வு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

5 மற்றும் 8ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்ய வலியுறுத்தி பல்வேறு கட்சி தலைவர் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்று முடிந்த நிலையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

அதில், 5ஆவது மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவிக்கப்பட்ட பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பொதுத்தேர்வு நடத்துவதாக, கடந்த செப்டம்பர் மாதம் 13ம் தேதி பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசாணை வெளியிடப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்