300 நோயாளிகளை கொலை செய்த நர்ஸ்; அதிர்ச்சி சம்பவம்!

300 நோயாளிகளை கொலை செய்த நர்ஸ்; அதிர்ச்சி சம்பவம்!

ஒல்டன்பெர்க்:

ஜெர்மனி நாட்டின் நர்ஸ் ஒருவர் 5 வருடங்களில் 300 நோயாளிகளை கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

கடந்த 2000ல், ஜெர்மன், டெல்மன்கார்ஸ்ட்டில் உள்ள மருத்துவமனையில் நீல்ஸ் ஏகல் என்பவர் நர்ஸாக பணியில் சேர்ந்துள்ளார்.

இவர், கடந்த 2006ம் ஆண்டு 4 நோயாளிகளை கொலை செய்த குற்றத்திற்காக தற்போது ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறான்.

இந்நிலையில், நீல்ஸ் ஏகல் 300 நோயாளிகளை கொன்றிருப்பது தற்போது தெரியவந்துள்ளது. மருத்துவமனையில் ஒருவரது இறப்பும் கூட சந்தேகத்தை எழுப்பாததும், பாதுகாப்பு குறைபாடும் இருந்தது அதிர்ச்சியை அளிக்கிறது.

இந்த கொலைகள் அனைத்தும், அந்த மருத்துவமனையில் புதியதாக பணிக்கு சேர்ந்த நர்ஸ் ஒருவரின் கடிதத்தால் தெரியவந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ள நிலையில், வரும் ஜூனில் வழக்கின் தீர்ப்பு வழங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்