13 ஆண்டுகளாக யோகிபாபு பட்ட அவமானங்கள்

  • In Cinema
  • June 4, 2020
  • 175 Views
13 ஆண்டுகளாக யோகிபாபு பட்ட அவமானங்கள்

பரட்டை போல சுருள் முடி பார்ப்பதற்கு பயங்கரமாக தோற்றம் கொண்ட பிரபல நடிகர் யோகி பாபு தனது வாழ்வில் பட்ட கஷ்டம், அவமானம், கண்ணீர் இவை நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை.

தன்னுடைய உருவத்தினை அவதானித்த அனைவருக்கும் பிடிக்கவில்லையே இவ்வாறு ஒதுக்கிகின்றனரே பல நாட்கள் வேதனையில் இருந்துள்ளார்.

இவர் தனது நண்பருடன் தனியார் தொலைக்காட்சி கொமடி நிகழ்ச்சிக்கு துணைக்குச் செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். அங்கு ஒரு ஓரமாக பயந்துபோய் நின்று ஆயிரம் ஏக்கங்களோடு படப்பிடிப்பினை பார்ப்பாராம்.

பின்பு மாலை வேளையில் நண்பருடன் அறைக்கு வந்துவிடுவார். நடிப்பதற்கு வாய்ப்பு கேட்பதற்கு கூச்சப்பட்டுக்கொண்டிருந்த யோகி பாபுவை அந்த ரிவி இயக்குனர் அவதானித்துள்ளார்.பார்க்கும் அனைவருக்கும் பயமுறுத்தும் தோற்றத்தினைக் கொண்டிருந்த இவரை வைத்து ரிவி ஷோவில் நடிக்க வைத்துள்ளார். பின்பு மிகவும் போராடி சினிமாவில் நுழைந்த இவர் பன்னிவாயன் என்ற கதாபாத்திரத்தில் மக்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளார்.

அதன் பின்பு தனக்கு வந்த வாய்ப்பினை எல்லாம் சாதூரியமாக பயன்படுத்திய இவர் இன்று புகழின் உச்சத்திற்கு இருந்து வருகின்றார். எந்தவித பந்தாவும் இல்லாமலும், ஸ்டார் ஹொட்டல் சாப்பாடு, கேரவன் என பந்தா இல்லாமல் சாதாரண மனிதராகவே உலா வருகின்றார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்