பெங்களூரு:
கர்நாடகாவில் கன்னட மொழிதான் முக்கியம் என அம்மாநில முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
இந்தி மொழி குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ள கருத்துக்கு தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இந்நிலையில், கர்நாடக முதல்வர் எடியூரப்பா தனது டுவிட்டர் பக்கத்தில், இந்தியாவிலுள்ள அனைத்து அலுவல் மொழிகளும் சமமானது. கர்நாடகாவை பொறுத்தவரை கன்னடம் தான் முக்கிய மொழி. கன்னட மொழி மற்றும் கலாச்சாரத்தை பரப்ப முக்கியத்துவம் அளிப்போம் என தெரிவித்துள்ளார்.