பெங்களூரு:
நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் முன்னாள் கர்நாடக முதல்வரான சித்தராமையாவை கர்நாடக முதல்வர் எடியூரப்பா சந்தித்து நலம் விசாரித்தார்.
காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் கர்நாடக முதல்வருமான சித்தராமையா, நெஞ்சுவலி காரணமாக நேற்று இரவு பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வரும் சித்தராமையாவை கர்நாடக முதல்வர் எடியூரப்பா, மாநில அமைச்சர்கள் ஈஸ்வரப்பா, பசவராஜா மற்றும் பொம்மாய் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.