காலிகுடங்களுடன் சாலை மறியல்

காலிகுடங்களுடன் சாலை மறியல்

ஒசூர்:

சூளகிரி அருகே சீரான குடிநீர் கேட்டு 50க்கும் மேற்ப்பட்ட பெண்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த சூளகிரி அருகே உள்ளது ஜோகிரிபால்யம் கிராமம். இங்கு 70க்கும் மேற்ப்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறார். இந்த கிராமத்தில் தண்ணீர் விநியோகம் குழாய் உடைப்பால் கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து பல முறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூற்றம் சாடும் கிராமமாகள். தண்ணீர்க்காக, பல கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து விவசாய நிலங்களில் தண்ணீர் எடுத்து வரும் நிலை தொடர்கிறது. என்று ஆத்திரம் அடைந்த கிராமமாகள் இன்று காலை 50க்கும் மேற்ப்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் பேரிகை சூளகிரி மாநில நெடுஞ்சாலை புலியர்ச்சி கிராமத்தில் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் அந்த அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்