கான்பூர்:
உத்தரப்பிரதேச மாநிலத்தில் திருமண நிகழ்ச்சியில் நடனமாடிய பெண் மீது துப்பாக்கியால் சுட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம், கான்பூர் அருகே உள்ள சித்ரகூட் பகுதியில், ஊராட்சி மன்ற தலைவர் சுதிர் சிங் படேல் மகளின் திருமணம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இசை மற்றும் நடனக் கச்சேரி நடைபெற்றது.
மேடையில் நடனக்குழுவைச் சேர்ந்த ஹினா என்ற இளம்பெண் ஆடிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென ஒரு நபர் குடிபோதையில், அங்குள்ளவர்களை துப்பாக்கியால் சுடப்போகிறேன் என தெரிவித்தார். உடனே அதிர்ந்துபோன டான்சர் ஹீனா நடனத்தை நிறுத்தியுள்ளார்.
அந்த பெண் டான்சை நிறுத்தியதால் ஆத்திரமடைந்த அந்த நபர் ஹீனா மீது துப்பாக்கியால் சுட்டார். இந்த சம்பவத்தில் ஹீனா மற்றும் பெண்ணின் தாய்மாமன்கள் இருவர் காயமடைந்தனர். இதனால் அங்கு பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
தகவலறிந்து அங்கு விரைந்த போலீசார், துப்பாக்கிச் சூடு நடத்திய சுதிர் சிங் மற்றும் பூல் சிங் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது.
What is wrong with us, man? This woman was shot on the face by a drunk man in Uttar Pradesh because she stopped dancing at a wedding. Sick. Outrageous. Bloody hell. pic.twitter.com/A7HYc1wObM
— Aditya Raj Kaul (@AdityaRajKaul) December 6, 2019