நண்பனுக்காக மனைவியை கொலை செய்த கொடூரம்

நண்பனுக்காக மனைவியை கொலை செய்த கொடூரம்

சென்னை:

சென்னையில் நண்பனுக்காக மனைவியையே கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தலைமறைவான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பெருங்குடி கல்லுக்குட்டையைச் சேர்ந்தவர் கார் ஓட்டுநர் உதயகுமார். இவரது மனைவி 25 வயதான மணி மேகலை. இவருக்கு 2வதான ஆண் குழந்தை உள்ளது.

கடந்த திங்கட்கிழமையன்று உதயகுமார் தனது வீட்டு வாசலில் குடி போதையில் படுத்துக்கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு வந்த அவரது மனைவி மணிமேகலை, வீட்டுக்குள் நுழைந்துள்ளார்.

சிறிது நேரத்தில் வீட்டுக்குள் இருந்து மணிமேகலை கத்தும் சத்தம் கேட்டது. அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து பார்த்த போது, மணிமேகலையை உதயகுமார் கத்தியால் குத்திக்கொண்டிருந்தார். அவரை தள்ளிவிட்ட அக்கம்பக்கத்தினர் மணிமேகலையை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மணிமேகலை உயிரிழந்தார்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த துரைபாக்கம் போலீசார், விசாரணை நடத்தியபோது அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகின. உதயகுமார் தனது நண்பர் மாணிக்கவேலுடன் வீட்டு வாசலில் எப்போதும் குடித்துக்கொண்டிருப்பார்.

திங்கட்கிழமை காலை உதயகுமார் தனது நண்பருடன் குடித்துவிட்டு வீட்டு வாசலில் படுத்துக்கொண்டிருந்தனர். அப்போது வீட்டுக்குள் நுழைந்த மணிமேகலை, தனது உடையை மாற்றிக்கொண்டிருந்துள்ளார். அப்போது கணவரின் நண்பர் மாணிக்கவேல் உள்ளே நுழைந்துள்ளார். அதிர்ச்சியடைந்த மணிமேகலை அவரை திட்டியுள்ளார். பதிலுக்கு மாணிக்கவேலும் கடுமையாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

ஆனால், உதயகுமார் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்துள்ளார். இதனையடுத்து மாணிக்கவேலின் உறவினர்களும் மணிமேகலை ஆபாச வார்த்தைகளால் திட்டியுள்ளனர்.

இதனையடுத்து, மணிமேகலையும் அவரது சகோதரியும் போலீசில் புகார் அளித்துவிட்டு வீடு திரும்பியுள்ளனர். அப்போது, உதயகுமார் தகராறில் ஈடுபட்டுள்ளார். பின்னர், வீட்டினுள் நுழைந்த மணிமேகலையை, உதயகுமார் கத்தியால் மார்பு மற்றும் கழுத்து பகுதியில் சரமாரியாக குத்தி கொலை செய்துள்ளார்.

இதனையடுத்து, நண்பர் மாணிக்கவேலுடன் உதயகுமார் தலைமறைவாகினர். இவர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

நண்பனுக்காக தன்னுடைய மனைவியே கொலைசெய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்