சென்னை:
தெலங்கானாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த 4 குற்றவாளிகளை என்கவுன்ட்டர் செய்த போலீசாருக்கு நடிகர் விஷால் நன்றி தெரிவித்துள்ளார்.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பெண் மருத்துவரை கடந்த 27ம் தேதி பாலியன் வன்கொடுமை செய்து எரித்து கொலை செய்த சம்பவத்தில், முகமது பாஷா, சிவா, நவீன், சென்ன கேசவுலு என்ற 4 பேரை சிசிடிவி கேமரா உதவியுடன் காவல்துறையினர் கைது செய்தனர்.
இதனையடுத்து, இன்று அதிகாலை சம்பவ இடத்துக்கு விசாரணைக்காக அவர்களை அழைத்து சென்றபோது தப்பியோட முயன்றபோது, 4 பேரையும் தெலங்கானா போலீசார் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர்.
இதற்கு பல்வேறு மகளிர் அமைப்பினர் இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர். தெலங்கானா போலீசாருக்கு பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தமிழக நடிகர் விஷால் தெலங்கானா காவல்துறைக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும் அதில் நீதி வழங்கப்பட்டுவிட்டது என்றும் பதிவிட்டுள்ளார்.