ஆளுநருடன் நடிகர் விஷால் சந்திப்பு!

ஆளுநருடன் நடிகர் விஷால் சந்திப்பு!

சென்னை:

நடிகர் சங்க தேர்தல் தொடர்பாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன் நடிகர் விஷால் சந்தித்து பேசுகிறார்.

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வரும் 23ம் தேதி சென்னை அடையாறில் உள்ள எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, நடிகர் சங்க தேர்தலுக்கு பாதுகாப்பு கோரி சென்னை காவல் ஆணையருக்கு உத்தரவிடக்கோரி, நடிகர் விஷால் தலைமையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது.

விசாரணையில், பொதுமக்கள் யாருக்கும் இடையூறு ஏற்படாத வண்ணம் சென்னை புறநகரிலோ அல்லது இசிஆரில் தேர்தல் நடத்த வேண்டும் என நீதிபதி அறிவுறுத்தினார்.

இந்நிலையில், சென்னையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துடன், நடிகர் விஷால் இன்று சந்தித்து நடைபெற்றுள்ளது.

நடிகர் சங்க தேர்தல் விவகாரம் தொடர்பாக நடைபெறும் இந்த சந்திப்பில் கருணாஸ், பூச்சி முருகன் ஆகியோரும் உடனுள்ளனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்