கிராமத்தினரே நடத்திய ‘எலக்ஷன்’

கிராமத்தினரே நடத்திய ‘எலக்ஷன்’

ராமநாதபுரம்:

ராமநாதபுரம் மாவட்டத்தில் கிராம பொதுமக்களே நடத்திய மாதிரி வாக்குப்பதிவை போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம், திருபுல்லாணி ஒன்றியத்தை சேர்ந்த களரி கிராம ஊராட்சியில் சுமைதாங்கி உள்ளிட்ட 4 கிராமங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த ஊராட்சியின் தலைவர் பதவிக்கு சுமைதாங்கி கிராமத்தினர் 4 பேர் மட்டுமே போட்டியிடவுள்ளனர்.

இந்நிலையில், அக்கிராமத்தின் ஓட்டுகள் பிரியாமல் இருப்பதற்காக 4 பேரில் ஒருவரை தேர்ந்தெடுக்க மாதிரி ஓட்டுப்பதிவு நடத்த கிராமத்தினர் முடிவு செய்தனர். இதன்படி, மாதிரி ஓட்டுச்சீட்டு மற்றும் ஓட்டுப்பெட்டி தயார் செய்து, 134 பேர் வாக்களித்துவந்த நிலையில், தகவலறிந்த போலீஸ் அதிகார் அங்கு விரைந்து தடுத்து நிறுத்தினர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்