மதுரை:
சர்ச்சையை கிளப்பிய ‘ஜோசப் விஜய்’ என்ற வாசகத்துடன் ‘மாஸ்டர் ஜோசப் விஜய்’ எனும் போஸ்டர் ஒட்டியுள்ளது மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெய்வேலியில் நடந்த படப்பின் போது, விஜய்யை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று வருமானவரித்துறையினர் விசாரணை நடத்தினர். இதனையடுத்து படப்பிடிப்பில் கலந்துகொண்ட விஜய்யை கண்டித்து, பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்நிலையில், ஆந்திராவை நாங்கள் காப்பாற்றி விட்டோம், கலங்கி நிற்கும் தமிழ்நாட்டை நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும் மக்கள் நலன் கருதி களம் இறங்குங்கள் என ஆந்திர முதல்வர் ஜெகன்மோகனும், பிரசாந்த் கிஷோரும், தமிழகத்தை காப்பாற்றுமாறு விஜயிடம் கேட்பது போல், போஸ்டர் ஒட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.