தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு!

தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு!

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் இன்று முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பாஞ்சாலங்குறிச்சி கோவில் திருவிழாவையொட்டி, அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டம் முழுவதும் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாஞ்சாலங்குறிச்சி, வீர சக்க தேவி ஆலய திருவிழா, ஏப்ரல் 10 மற்றும் 11ம் தேதிகளில் நடைபெற உள்ளதால், அசாம்பாவிதங்கள் தவிர்க்கவும், சட்டம் ஒழுங்கு நிலைநாட்டிடவும், ஏப்ரல் 9ம் தேதி மாலை 6 மணி முதல் 12ம் தேதி காலை 6 மணி வரை தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த தடையுத்தரவு பொருந்தாது என்றும் அதேபோல திருமணம் மற்றும் இறுதி சடங்கு ஊர்வலங்கள் ஆகியவற்றுக்கும் பொருந்தாது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதையடுத்து, தடை உத்தரவை முன்னிட்டு கோயில் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்