சென்னை:
குரூப் 4 தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 99 தேர்வர்களை டிஎன்பிஎஸ்சி தகுதிநீ க்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் 1ம் தேதி டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு தமிழகம் முழுவதும் நடைபெற்றது. இதற்கான தரவரிசை பட்டியல் கடந்த நவம்பரில் வெளியானது. தரவரிசைப்பட்டியலில் முதல் 100 இடங்களுக்குள் இடம்பிடித்து இருந்தவர்களில் 40 பேர் ராமேஸ்வரம், கீழக்கரை தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்கள். இதனால் மற்ற தேர்வர்களுக்கு சந்தேகம் ஏற்பட்ட நிலையில், டிஎன்பிஎஸ்சி விசாரணை நடத்தியது.
இந்த முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்ட நிலையில், ராமேஸ்வரம் தாசில்தார் பார்த்தசாரதி, கீழக்கரை த £சில்தார் சிக்கந்தர் பபிதா ஆகியோரிடம் முதற்கட்ட விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், ராமேஸ்வரம், கீழக்கரை மையங்களில் நடந்த குரூப் 4 தேர்வில் முறைகேடு நடந்திருப்பதை டிஎன்பிஎஸ்சி உறுதி செய்துள்ளது. இடைத்தரகர்கள் உதவியுடன் முறைகேட்டில் ஈடுபட்ட 99 தேர்வர்களை டிஎன்பிஎஸ்சி தகுதிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.