குழந்தைகள் ஆபாசபடம்; திருச்சியில் ஒருவர் கைது

குழந்தைகள் ஆபாசபடம்; திருச்சியில் ஒருவர் கைது

திருச்சி:

குழந்தைகளின் ஆபாச வீடியோ பகிர்ந்ததாக திருச்சியை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார்.

பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது பாலியல் வன்கொடுமை அதிகரித்து வருவதன் காரணமாக, ஆபாச வீடியோ இணையதளங்களை மத்திய அரசு தடை செய்தது.

இதனையடுத்து, ஆபாச வீடியோக்கள் பார்ப்பவர்களின் பட்டியலை மத்திய உள்துறை அமைச்சகம் அந்தந்த மாநில போலீசாருக்கு அனுப்பியது. இந்நிலையில், பெண்கள் மற்றும் சிறார்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு கூடுதல் டி.ஜி.பி., ரவி, சிறார்கள் தொடர்பான ஆபாச படம் மற்றும் வீடியோ பார்த்தவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. அவர்கள், விரைவில் கைது செய்யப்படுவர் என தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து, சமூக வலைத்தளங்களில் குழந்தைகளின் ஆபாச வீடியோவை பகிர்ந்து வந்த திருச்சி காஜாபேட் தெருவை சேர்ந்த ஏசி மெக்கானிக் கிறிஸ்டோபர் அல்போன்ஸ் ராஜ் என்பவர் இன்று கைது செய்யப்பட்டார்.

இவர், நிலவன் நிலவன், ஆதவன் ஆதவன் என்பது உள்ளிட்ட போலி சமூக வலைத்தளங்கள பயன்படுத்தி கடந்த 2 ஆண்டுகளாக குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை பகிர்ந்து வந்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்