சென்னை:
டிஎன்பிஎஸ்சி குரூப்4 தேர்வு முடிவு இன்று வெளியிடப்பட்டுள்ளது.
கிராம நிர்வாக பணியாளர் உள்ளிட்ட 6,491 பணியிடங்களுக்கு, கடந்த செப்டம்பர் 1ம் தேதி தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணயத்தால் தேர்வு நடத்தப்பட்டது.
இந்த தேர்வின் முடிவு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகள் http://www.tnpsc.gov.in/என்ற இணையதளத்தில் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.
தேர்வாணைய வரலாற்றில் முதன்முறையாக 72 நாட்களில் முடிவை வெளியிட்டு டி.என்.பி.எஸ்.சி. சாதனை படைத்துள்ளது.