விக்ரம் லேண்டரை கண்டுபிடித்த தமிழனுக்கு பாராட்டு

  • In Chennai
  • December 4, 2019
  • 207 Views
விக்ரம் லேண்டரை கண்டுபிடித்த தமிழனுக்கு பாராட்டு

சென்னை:

விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்க உதவிய சென்னையை சேர்ந்த சண்முக சுப்பிரமணியனை அழைத்து தமிழக முதல்வர் பாராட்டு தெரிவித்தார்.

இஸ்ரோ நிலவுக்கு அனுப்பிய ‘சந்திராயன் 2’ விலிருந்து நிலவில் தரையிறங்கிய விக்ரம் லேண்டர் கடைசி 3 நிமிடங்களில் காணாமல் போனது. இதனையடுத்து, நாசாவின் உதவியுடன் இஸ்ரோ விக்ரம் லேண்டரை தேடி வந்தது.

இந்நிலையில், கடந்த செப்டம்பரில் காணாமல் போன விக்ரம் லேண்டரின் உடைந்த பாகங்களை நாசா கண்டுபிடித்துள்ளது. நிலவின் மேற்பரப்பில் விக்ரம் லேண்டரின் உடைந்த பாகங்கள் இருப்பது தெரியவந்திருப்பாதகவும், மதுரையை சேர்ந்த இளைஞர் சண்முக சுப்பிரமணியன் தகவலின் பேரில் கண்டறியப்பட்டதாக நாசா தெரிவித்துள்ளது.

இந்நிலையில், மதுரையை பூர்வீகமாகக்கொண்ட சென்¬னையில் லினக்ஸ் இந்தியா டெக்னாலஜி என்ற நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வரும் சண்முக சுப்பிரமணியம் மற்றும் அவரது பெற்றோரை அழைத்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று பாராட்டு தெரிவித்தார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்