திருவண்ணாமலையில் ஏற்றப்பட்ட மகா தீபம்

திருவண்ணாமலையில் ஏற்றப்பட்ட மகா தீபம்

திருவண்ணாமலை:

மகா தீபத்திருவிழாவையொட்டி, திருவண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது.

திருவண்ணாமலையில் தீபத்திருவிழாவையொட்டி, 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. 200 கிலோ எடை, 5 அடி உயர கொப்பரையில் 3,500 கிலோ ஆவின் நெய் ஊற்றப்பட்டு தீபம் ஏற்றப்பட்டது.

மகாதீபம் ஏற்றப்படுவதற்கு முன், அருணாச்சலேஸ்வரர் கோவிலில் அர்தநாரீஸ்வரர் பக்தர்களுக்கு காட்சியளித்தார். அப்போது கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டபின் மகாதீபம் மலை உச்சியில் ஏற்றப்பட்டது. இதனால் திருவண்ணாமலை நகரமே விழாக்கோலம் பூண்டுள்ள நிலையில், மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்