சிரியா:
சிரியாவில் இரு ராணுவ முகாம்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியில், 40 ராணுவ வீரர்கள் மற்றும் 50 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
சிரியாவில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள இட்லிப் மகாணத்தில், பயங்கரவாதிகளுக்கும் ராணுவத்தினருக்கும் அடிக்கடி சண்டை நடைபெறுவது வழ க்கம். இந்நிலையில், சமாகா மற்றும் ஹவாய்ன் பகுதிகளில் உள்ள 2 ராணுவ முகாம்கள் மீது 400க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் 40 ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாகவும், 80 பேர் படுகாயமடை ந்துள்ளதாகவும், அதேபோல ராணுவ வீரர்கள் நடத்திய பதிலடி தாக்குதலில் 50 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டிருப்பதாகவும், 90 பேர் படுகாயமடைந்துள்ளதாகவம் தகவல்கள் வெளியாகியுள்ளது.