வில்நியூவே:
சுவிஸ் நாட்டில் வில்நியூ நகரில் நடந்த விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் காந்தி சிலையை திறந்து வைத்தார்.
அரசு முறைப் பயணமாக குடியரசுத்த¬லைவர் ராம்நாத் கோவிந்த் சுவிஸ் நாட்டுக்கு சென்றுள்ளார். காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அந்நாட்டின் வில்நியூவே நகரின் ஜெனிவா ஏரிக்கரையில் நிறுவப்பட்ட காந்தி சிலையை அவர் திறந்து வைத்து பேசினார்.
அப்பகுதிக்கு காந்தி சதுக்கம் என்று பெயரிடப்பட்டதற்கு மக்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நன்றி தெரிவித்தார்.