ரயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை

ரயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை

ஒசூர்:

ஒசூரில் ரயில் முன் பாய்ந்து வாலிபர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் இரயில்வே நிலையத்திற்கு அருகில் வாலிபர் ரயிலில் சிக்கி உயிரிழந்திருப்பதாக ரயில்வே போலிசாருக்கு தகவல் வந்துள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற இரயில்வே போலிசார், இறந்தவரை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஒசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

உயிரிழந்த வாலிபரின் உடையில் இருந்த அவரின் ஆதார் அட்டையில் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தனூரை சேர்ந்த விஜய்குமார் என்பதும், ஒசூரிலிருந்து புறப்பட்ட ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துக்கொண்டது தெரியவந்தது.

அவர் இங்கு ஏன் தற்கொலை செய்துக்கொண்டார், இவர் எங்கு தங்கியிருந்தார் உள்ளிட்டவைகள் குறித்து ஒசூர் ரயில்வே போலிசார் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்