போதைப்பொருள் விவகாரம்: இலங்கை கிரிக்கெட் வீரருக்கு இடைக்கால தடை

  • In Sports
  • May 27, 2020
  • 172 Views
போதைப்பொருள் விவகாரம்: இலங்கை கிரிக்கெட் வீரருக்கு இடைக்கால தடை

போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக இலங்கை கிரிக்கெட் வீரருக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது இலங்கை கிரிக்கெட் வாரியம்.

சட்டவிரோதமாகப் போதைப் பொருளை வைத்திருந்த இலங்கை கிரிக்கெட் வீரர் சிநேகன் மதுசங்காவை கொழும்பு காவல்துறையினர் கைது செய்தார்கள்.

இலங்கையில் கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பன்னாலா பகுதியில் தன் நண்பருடன் காரில் சென்றுகொண்டிருந்த மதுசங்காவை நிறுத்தி, காவலர்கள் சோதனையிட்டார்கள். அப்போது, காருக்குள் போதைப்பொருள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து காருக்குள் வைக்கப்பட்டிருந்த 2 கிராம் ஹெராயினைக் காவலர்கள் பறிமுதல் செய்தார்கள்.இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், மதுசங்காவைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா். மதுசங்காவுக்கு இரு வாரம் நீதிமன்றக் காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜனவரி 2018-ல், வங்கதேசத்துக்கு எதிராக அறிமுகமான வேகப்பந்துவீச்சாளர் மதுசங்கா, முதல் ஒருநாள் ஆட்டத்திலேயே ஹாட்ரிக் எடுத்து சாதனை படைத்தார். 25 வயது மதுசங்கா, இதுவரை 1 ஒருநாள், 2 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார்.

இந்நிலையில் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக மதுசங்காவுக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது இலங்கை கிரிக்கெட் வாரியம். மதுசங்காவிடமிருந்து போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் குறித்து இலங்கை கிரிக்கெட் வாரியம் விசாரணை நடத்தவுள்ளது. விசாரணை முடியும்வரை அனைத்துவிதமான கிரிக்கெட் ஆட்டங்களிலும் பங்கேற்க மதுசங்காவுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்