ஒசூர்:
ஒசூரில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியின் 73வது பிறந்தநாள் தினத்தையொட்டி, காங்கிரசார் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்தனர்.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவரான சோனியா காந்தியின் 73வது பிறந்தநாள் இன்று கொண்டாடினார், அவரின் பிறந்தநாளில் காங்கிரஸ் கட்சியினர் நாடு முழுவதும் கொண்டாடி வரும் நிலையில், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ஒசூரில் உள்ள வரசித்தி விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜைகள்,அபிஷேகங்கள் நடத்தப்பட்டு சோனியா காந்தி நீடுழி வாழ பிரார்த்திக்கப்பட்டது.
காங்கிரஸ் கட்சியின் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தலைவர் முரளிதரன் தலைமையில் நடைப்பெற்ற இந்த பூஜையில், நகர தலைவர் நீலகண்டன்,மாவட்ட பொதுசெயலாளர் விஎம் பிரவீண்குமார்,மாவட்ட பொருளாளர் மாதேவா,எஸ்சி/எஸ்டி பிரிவு தலைவர் மாதேஷ்,துணை தலைவர் சாதிக், நகர செயலாளர் மௌலிக்குமார்,நகர பொருளாளர் நந்தகுமார் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.