நான் இருக்கிறேன் நான் பாத்துக்குறேன், டி20 உலகக்கோப்பை நமக்குத்தான் – சவால் விட்ட இளம் வீரர்

  • In Sports
  • February 19, 2020
  • 146 Views
நான் இருக்கிறேன் நான் பாத்துக்குறேன், டி20 உலகக்கோப்பை நமக்குத்தான் – சவால் விட்ட இளம் வீரர்

இந்திய அணி தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி 21ம் தேதி வெல்லிங்டன் மைதானத்தில் நடைபெற இருக்கிறது

இந்நிலையில் இந்த நியூசிலாந்து தொடருக்கான டி20 மற்றும் ஒருநாள் தொடரில் இடம் பெற்றிருந்த இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஷர்துல் தாகூர் பேட்டி ஒன்றினை அளித்துள்ளார்.
இந்த தொடரில் டி20 தொடரில் ரன்களை விட்டுக்கொடுத்தாலும் விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். மேலும் அதோடு பேட்டிங்கிலும் அவர் தனது திறமையை நிரூபித்தார்.ஆனால் ஒருநாள் போட்டிகளில் சோபிக்க தவறிய அவர் அதிக அளவில் ரன்களை விட்டுக்கொடுத்தார். அதனால் அவரை ஒரு நாள் தொடரில் யார் தேர்வு செய்தது ? அவரின் இந்த தேர்வு தேவைதானா ? என்பது போல கேள்விகள் எழுந்தன. இந்நிலையில் தற்போது அவர் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : உறுதியாக நான் உலக கோப்பையின் மீது கண் வைத்து உள்ளேன். நேர்மறையான சிந்தனையுடன் போட்டியில் விளையாடி இருந்தால் அதிக தன்னம்பிக்கை பெற்றுள்ளேன்.

மேலும் போட்டி மீதான ஆர்வம் அதிகரித்து உள்ளதால் உலக கோப்பையை வெல்வதற்கு என்னுடைய வேலையை சிறப்பாக செய்வேன். ஐபிஎல் தொடர் முக்கியமானது இந்த ஐபிஎல் தொடரில் இருந்து நான் உத்வேகத்தை பெற முடியும். அந்த உத்வேகத்தில் அப்படியே உலக கோப்பை கொண்டு செல்லும் போது உலக கோப்பையை கைப்பற்ற நான் உதவுவேன் என்று ஷர்துல் தாகூர் கூறியது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்