பொங்கலன்று பள்ளிக்கு வருவது கட்டாயமில்லை

பொங்கலன்று பள்ளிக்கு வருவது கட்டாயமில்லை

சென்னை:

வரும் பொங்கலன்று மோடியின் உரையை கேட்க பள்ளிக்கு வருவது கட்டாயமில்லை என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஜனவரி 16ம் தேதி பொங்கல் விடுமுறை தினத்தன்று, பிரதமர் மோடி உரையை கேட்க 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது.

மேலும், அனைத்து மாணவர்களும் தவறாமல் பள்ளிக்கு வருவதை மாவட்டத்தில் உள்ள அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் எனவும் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், பொங்கல் தினத்தன்று பிரதமர் நரேந்திர மோடி தொலைக்காட்சியில் ஆற்றும் உரையை மாணவர்கள் வீட்டில் இருந்தே கேட்கலாம், பள்ளிக்கு வரவேண்டிய அவசியம் இல்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்