நாங்குநேரி காலி..! தலைமை தேர்தல் ஆணையத்திடம் தகவல்..!!

நாங்குநேரி காலி..! தலைமை தேர்தல் ஆணையத்திடம் தகவல்..!!

சென்னை:

நாங்குநேரி சட்டமன்ற தொகுதி காலியாக உள்ளது என இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் கன்னியாக்குமரி தொகுதியில் போட்டியிட்ட, நாங்குநேரி எம்எல்ஏ., வசந்தகுமார் வெற்றிபெற்று எம்.பி., ஆனார். இதனையடுத்து, எம்எல்ஏ., பதவியை ராஜினாமா செய்தார்.

இதனைத்தொடர்ந்து, அந்த இடம் காலியாக இருப்பதாக சட்டப்பேரவை செயலாளர் அறிவித்தார். நாங்குநேரி தொகுதி காலியானது குறித்து, சட்டப்பேரவை செயலாளர் அளித்த கடிதத்தை தலைமை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பிவிட்டதாக, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித்துள்ளார்.

 

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்