வீட்டுக்காவலில் இருந்த காஷ்மீர் தலைவர்கள் விடுதலை

வீட்டுக்காவலில் இருந்த காஷ்மீர் தலைவர்கள் விடுதலை

ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீட்டுக்காவலில் இருந்த தலைவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தான சட்டப்பிரிவு 370ஐ நீக்கியதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முன்னாள் முதல்வர்கள் உமர் அப்துல்லா, பரூக் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்களை வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.

மேலும், ஜம்மு காஷ்மீர் முழுவதும் தொலைதொடர்பு இணைப்புகள் துண்டிக்கப்பட்டு பல்வேறு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டன.

தற்போது காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பி வருவதால், வீட்டுகாவலில் உள்ள தலைவர்களில் சிலரை விடுவிக்கும் நடவடிக்கையை காஷ்மீர் அரசு நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. அதன்படி, காஷ்மீர் அரசு முன்வைத்த நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டதன் அடிப்படையில், இன்று மக்கள் ஜனநாயக கட்சியின் முன்னாள் எம்எல்ஏ., யவார் மிர், காஷ்மீர் மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் நூர் முகமது, மக்கள் மாநாட்டுக் கட்சித் தலைவர் சஜத் லோனுக்கு நெருக்கமாக இருக்கும் முக்கிய தலைவரான சோயப் லோன் ஆகிய 3 தலைவர்களை வீட்டுக்காவலில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்